கிழக்கு மாகாணத்தின் அரசியல் அதிகாரம் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கிழக்கில் தமிழ் மக்களை விட முஸ்லிம் மக்களே அதிகம் வாழ்ந்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நிஸார் காரியப்பர் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணத்தில் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை உறுதிப்படுத்துவது மாத்திரமின்றி, கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் கடமை. வடக்கில் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களை மீளக்குடியேற்ற முன்னர், மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் கிழக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீளக்குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த இரண்டு மாகாணத்திலும் இடம்பெயர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை மீளக்குடியேற்றுவது மாத்திரமல்லாது. இந்த மாகாணங்களில் அதிகாரத்தை இரண்டு சமூகங்களுக்கும் பெற்றுக்கொடுப்பதும் அரசாங்கத்தின் கடமை எனவும் நிஸார் காரியப்பர் கூறியுள்ளார்.