மேல் மாகாண சபையின் முதலாவது கூட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தெரிவித்தார்.
ஐந்தாவது மேல் மாகாண சபையின் இன்றைய முதலாவது கூட்டம் ஸ்ரீஜயவர்தனபுரவில் அமைந்துள்ள மாகாண சபையின் புதிய கட்டடத் தொகுதி சபா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இக்கூட்டத்தில் மாகாண சபையின் புதிய தலைவர், பிரதித் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட ஏனைய பதவிகளுக்கான உத்தியோகபூர்வ தெரிவுகள் நடைபெறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். ஐந்தாவது மேல் மாகாண சபைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.