வன்னி யில் கல்வி நிர்வாக கட்டமைப்புகளைத் துரிதமாக மீளக் கட்டியெழுப்புவது குறித்து ஆராய பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் தலைமையிலான குழு இன்று வன்னிக்கு விஜயம் செய்கிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கு ஏற்ப, கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவின் வழிகாட்டலின் கீழ் வன்னியில் கல்வி நிர்வாக கட்டமைப்புகளைத் துரிதமாக மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதி அமைச்சர்; கூறினார். இடம்பெயர்ந்துள்ள மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு வசதியாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வன்னியில் நிலைமைகளை அவதானிப்பதுடன் கிழக்கில் திருகோணமலைப் பிரதேசத்திற்கும் சென்று பாடசாலைகளின் நிலைவரங்களை ஆராய்ந்து அவற்றின் தரத்தை மேம்படுத்த துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் பிரதி அமைச்சர் மேலும் கூறினார்.