சில அகதி முகாம்களுக்குச் செல்ல செஞ்சிலுவை குழுவுக்கு அரசாங்கம் தடை

refugee_.jpgஇடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள சில முகாம்களுக்குச் செல்ல செஞ்சிலுவை சர்வதேசக் குழுவுக்கு, இலங்கை அரசுதடைவிதித்துள்ளது என்று குழுவின் தலைவர் ஜக் வூப் கெலன் பேகர் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான மக்களின் நிலைமை குறித்து அறிவதற்காக அனைத்து முகாம்களுக்கும் செல்ல அனுமதி தரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“சில முகாம்களுக்கு மாத்திரம் செல்லவே எமக்கு அனுமதி தரப்படுகிறது. ஆனால், சில முகாம்களுக்குச் செல்ல அனுமதி தரப்படுவதில்லை. அத்துடன், மெனிக்பாம் முகாமின் சில பகுதிகளுக்குச் செல்லவும் அனுமதி தரப்படுகின்றது. பாதுகாப்புக் காரணங்களுக்காக சிலர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அரசுஎங்களுக்கு எந்தளவிற்குப் பணியாற்ற அனுமதியளிக்கும் என்று தெரியவில்லை. அத்துடன் முகாம்களில் உள்ள மக்களுக்கு உணவு, குடிதண்ணீர் மற்றும் மருத்துவ உதவிகள் போன்றன தேவைப்படுகின்றன”  என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *