அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு காட்டுப் பகுதியில் நேற்று இராணுவ கொமாண்டோ படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையொன்றின் போது 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர் என பாதுகாப்புத் தரப்பு கூறுகின்றது.
அந்த காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் மறைவிடமொன்று சுற்றி வளைக்கப்பட்ட சமயம் இரு தரப்பினருக்குமிடையில் மோதல் இடம் பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்புத் தரப்புத் தகவல்களின்படி குறிப்பிட்ட 11 சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள அதேவேளை, படையினருக்கு எத்தகைய சேதங்களும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. சம்பவத்தின் பின்பு ரி 56 ரகத் துப்பாக்கிகள் 05, கிளேமோர்க் குண்டுகள் 20, கைக்குண்டுகள் 02, மிதி வெடிகள் 02 மற்றும் ஒரு தொகுதி மருந்துப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.