ஐ நா வின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு வெற்றி

uno.jpgஇலங்கை விவகாரம் குறித்து ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடந்த அவசர மாநாட்டில் இலங்கை அரசாங்கத்ததுக்கு சாதகமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் போரின் பொழுது இலங்கைப் படைகளாலும், விடுதலைப்புலிகளாலும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரியும் மற்றும் இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு உதவி நிறுவனங்கள் சென்றுவர தடையற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கோரியும் ஐரோப்பிய நாடுகள் உட்பட 17 நாடுகளால் கிட்டத்தட்ட இலங்கை அரசாங்க கருத்துக்கு முரணான தீர்மானம் ஒன்று இந்த சந்திப்பில் முன்வைக்கப்பட்டது.

இறுதியாக இந்த தீர்மானத்தில் இணக்கத்தை காணும் வகையில் சில மாற்றங்களுடன் அது வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஆயினும் அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அந்த தீர்மானத்துக்கு எதிராக 22 வாக்குகளும், ஆதரவாக 17 வாக்குகள் அளிக்கப்பட்டன. 8 நாடுகள் அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

அதேவேளை, இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்காக சர்வதேச உதவி கோரும் தீர்மானம் ஒன்று இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது. அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது அது வெற்றி பெற்றுள்ளது.  அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 29 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் கிடடைத்தன. 6 நாடுகள் அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • ramesh
    ramesh

    “பணம் பாதாளம் வரை பாயும்”- என்பதெல்லாம் அந்தக்காலம், “பலம்தான் பாயும் பாதாளம் வரை”- என்பதை மேற்குலக பணக்கார நாடுகளுக்கு இலங்கையென்ற மிகச்சிறியதொரு நாடு நன்றாகப்புரிய வைத்துள்ளது உண்மையில் ஆச்சரியமான விடயம்தான். இதைத்தான் “காலமாற்றம்” என்று சொல்லுவார்களோ?

    Reply
  • rohan
    rohan

    என்ன பலம் பாய்ந்தது பாதாளம் வரை?

    ஆனானப்பட்ட தென்னாபிரிக்காவே இலங்கைக்கு ஆதரவாகத் தான் கை தூக்கியிருக்கிறது.

    புவிசார் அரசியல் சதுரங்கத்தில் இதெல்லாம் சகசமப்பா!

    Reply
  • palli
    palli

    இந்த வெற்றியும் இலங்கையின் தலைநகரில் கொண்டாட படலாம்; ஆனால் இது ஒரு நிரந்தர வெற்றி அல்ல; தமிழர்க்கு ஒரு சரியான தீர்வு
    கிடைக்கும் வரை சிங்கள அரசுக்கு வெற்றி என்பது பகல் கனவுதான்; ஆகவே நிலந்தர வெற்றிக்கான முயற்சியை அரசு மேற்கொள்வதுவே இரு இன மக்களுக்கும் மகிழ்ச்சியான வாழ்வு; அதை விட்டு புலிகள் முகாம்களை தகர்த்து விட்டு பட்டாசு கொளித்தி கொண்டாடியது போல் அரசும் சின்ன பிள்ளைதனமாக செயல்படலாமா? அன்று புலிக்கு இறந்த சிறுவர்(புலிதான்) கவலையில்லை; அதே போல் இன்று அரசுக்கும் மாண்ட ராணுவம் பற்றி கவலையில்லை;

    Reply