திருமுறிகண்டி ஆலயம், ரயில் நிலையத்தை மீள் நிர்மாணிக்க விரிவான ஏற்பாடு

யுத்தத்தினால் சிதைவடைந்துள்ள யாழ். திருமுறிகண்டி ஆலயம் மற்றும் ரயில் நிலையத்தை மீள நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளில் இளைஞர் விவகார அமைச்சு ஈடுபட்டு வருகிறது.

இளைஞர் சேவைகள் மன்ற உறுப்பினர்களின் பங்களிப்போடு இதற்கான நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். இதனையொட்டி நான்கு பேரணிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் இப் பேரணிகள் ஊர்வலமாகச் சென்று நிதி சேகரிப்பில் ஈடுபடவுள்ளன.

மகரகம நகரிலிருந்து இரத்தினபுரி சமன் தேவாலயம் வரை ஒரு பேரணி ஊர்வலத்தை மேற்கொள்ளும். காலி, முன்னேஸ்வரம், குருநாகல் பகுதிகளிலும் இப் பேரணிகள் இடம்பெறுவதுடன் முறிகண்டி ஆலயம் மற்றும் ரயில் நிலைய மறுசீரமைப்புக்கான நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. இதன் மூலம் ஐம்பது இலட்சம் ரூபா நிதியினைத் திரட்ட எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் கொடி தினத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியும் இந் நடவடிக்கைக்குச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *