நாட்டின் பல பாகங்களிலும் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதனால் பொது மக்கள் விழிப்புடன் இருந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்தழைப்பு வழங்கவேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெங்குக் காய்ச்சல் காரணமாக இதுவரையில் இலங்கையில் 75 போர் மரணமாகியுள்ளதாகவும் 52000 பேருக்கு இந்தக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும் டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் கண்டி, கம்பளை, கேகாலை, குருநாகல், களுத்துறை, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, மாத்தறை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்நோய் தீவிரமாகப் பரவிவருவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதுள்ள காலநிலை நுளம்புகள் பெருகுவதற்கு சாதகமாக உள்ளதால் பொது மக்கள் தமது சூழலை தூய்மையாக வைத்து நுளம்புப் பெருக்கத்தை தடுக்க உதவ வேண்டும் எனவும் கேரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.