55 இலங்கையர் இந்தோனேசிய சிறையில் உண்ணாவிரதம்

இந்தோனேசியாவின், அச்சே மாநில சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 55 இலங்கையர்கள் அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு நேற்று கூறியது. இவர்கள் சட்டவிரோதமாக இந்தோனேசியாவுக்கு நுழைந்ததன் காரணமாக

கைதாகியுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. இவர்கள் தொடர்பான விபரங்களை இந்தோனேசிய அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் வந்தால் மாத்திரமே தமது உண்ணாவிரதத்தை கைவிடுவதாக உண்ணாவிரதமிருக்கும் இலங்கையர்கள் தெரிவித்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவுக்கு சட்டவிரோதமாக நுழைந்த 446 பேர் இந்த வருடம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 193 பேர் மியன்மார்வாசிகளும் 55 இலங்கையர்களும் அடங்குவர் என அறியவருகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *