வல்வெட்டித்துறையில் மாணவிகளுடன் சேஷ்டை; மூன்று இளைஞர்கள் கைது

sri-lankan-students.jpgவீதியால் செல்லும் மாணவிகளுடன் நீண்ட நாட்களாக சேஷ்டை செய்துவந்த இளைஞர்களில் மூவர் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.  இவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். நீதிவான் கே. அரியநாயகம் மூவரையும் கடுமையாக எச்சரித்தார்.

வடமராட்சிப் பகுதியில் வீதியால் செல்லும் மாணவிகள், இளம் பெண்களிடம் சில இளைஞர்கள் அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதாக பெற்றோர் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு முறையிட்டிருந்தனர். இதையடுத்து பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தனர்.

இதன்போது உடுப்பிட்டியில் இளைஞர் குழு ஒன்று இவ்வாறு நடந்துகொண்ட போது பொலிஸாரைக் கண்டதும் ஓட முயற்சித்தனர் அவர்களில் மூவரை பொலிஸார் துரத்திப்பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அனைவரும் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *