அமைச்சரவையில் பங்கேற்பது பற்றி விவாதித்து அறிவிப்போம்: கலைஞர்

karunanidhi.jpgமத்திய அமைச்சரவையில் தி.மு.க. சேருவது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் உட்பட 20 கேபினட் அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.

இந்த புதிய அரசில் தி.மு.க.வுக்கு எத்தனை அமைச்சர்கள், எந்தெந்த இலாகாக்களை தருவது? என்பது குறித்து டெல்லியில் 2 நாட்கள் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தி.மு.க. தலைவர், முதல் அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டார்.

ஆனால் இதில் சுமுக முடிவு ஏற்படவில்லை. மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவது என்றும், காங்கிரஸ் கூறிய  பார்முலா’ குறித்து செயற்குழு அல்லது உயர்நிலை செயல்திட்டக்குழுவில் விவாதித்து முடிவு செய்யப்படும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டு, கருணாநிதி சென்னை புறப்பட்டு வந்துவிட்டார். சென்னை வந்த பின் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தி.மு.க.வின் முன்னணி தலைவர்களுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த விஷயங்கள் குறித்து முதல் அமைச்சர் கருணாநிதி, கட்சியின் முன்னணி தலைவர்களுடன் ஆலோசித்தார். அதன் பின்னர் அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் கருணாநிதி கூறியிருப்பதாவது:  15 வது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து அமைச்சரவை அமைக்கும் காலக் கட்டத்தில் டெல்லியிலே உள்ள சில தொலைக்காட்சிகளில் வேண்டுமென்றே திட்டமிட்டு, தி.மு.க. அமைச்சர்களைப் பற்றி பொய்ப் பிரச்சாரம் செய்ததை டெல்லி நிருபர்கள் கூட்டத்தில் பிரதமரே விளக்கமளித்து மறுத்திருப்பதற்கும், அதைத் தொடர்ந்து பிரதமரே மத்திய அமைச்சரவையில் தி.மு.க. பங்கு பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்ததற்கும் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக் குழு பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.அமைச்சரவையில் பங்கேற்பது பற்றியும் விவாதித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *