முன்னாள் அமைச்சரும், சிரேஸ்ட அரசியல்வாதியுமான மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எலிக் அலுவிகார நேற்று (17) கொழும்பு தனியார் வைத்தியசாலையில் காலமானார்.
82வயது நிரம்பிய இவர் நான்கு மகன், ஒரு மகளின் தந்தையாவார். இவரின் மகன்மார்களுள் ரன்ஜித் அலுவிகார தற்போதைய மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும், வசந்த அலுவிகார மாகாணசபை உறுப்பினராகவும், சல்ஜித் அலுவிகார மாத்தளை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவராகவும், சகத் அலுவிகார தோட்ட அதிகாரியாகவும் கடமையாற்றி வருகின்றனர்.