அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் மூலம் தமிழர் களுக்குச் சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்படாத வரையில் போர் முடிவடைந்து விட்டதாகக் கருதமுடியாது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகார உதவிச் செயலாளர் நாயகம் ஜோன்ஹோம்ஸ் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து மேலும் தெரிவித்ததவை வருமாறு: இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என அரசுஅறிவித்துள்ள போதிலும் அவர்களின் கெரில்லா தாக்குதல் தொடரக் கூடும். சமாதான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படாவிட்டால் எதிர் காலத்தில் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்படாத வரையில் யுத்தம் முடிவடைந்ததாகக் கருத முடியாது. அரசுயுத்தத்தில் வெற்றி பெற்ற போதிலும், சமாதானத்தை நிலைநாட்டுவதில் தோல்வியடைந்து விடக் கூடாது என்பதே ஐக்கிய நாடுகளின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது என்றார்.