காங்கேசன் துறைக்கும் திருகோண மலைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டச் செயலகத்தில் மேமாத 4 ஆவது கப்பலிற்கான அனுமதிச் சீட்டினைப் பெற்றுக்கொண்டவர்களையும் அவசர தேவையின் நிமித்தம் செல்வதற்கு செயலகத்தில் பதிவினை மேற்கொண்டவர்களையும் இன்று திங்கட்கிழமை காலை ஏழு மணிக்கு யாழ். ரயில் நிலையத்திற்கு சமுகமளிக்குமாறு அரச அதிபர் அறிவித்துள்ளார்.