கென்யா வுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரத்ணசிறி விக்ரமநாயக்க அந்நாட்டு ஜனாதிபதி எம்வய் கிபகியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கென்ய ஜனாதிபதியின் அழைப்பையேற்று அங்கு சென்றுள்ள பிரதமருக்கும் கென்ய ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு அந்நாட்டின் தலைநகரான நைரோபியிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்றது.
இரு தலைவர்களுக்குமிடையிலான இச்சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐந்து நாடுகளைக் கொண்ட கிழக்கு ஆபிரிக்க சமூகத்தில் கென்யா மிக முக்கியமான ஒரு நாடாகும். பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள இலங்கையும் கென்யாவும் 1970ஆம் ஆண்டிலிருந்தே இராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.