வாழைச் சேனை பிரதேசத்தில் இன்று காலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவர் ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மதன் எனப்படும் சண்முகநாதன் வசந்தன் (வயது 29) என இந்நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கருங்காலிச் சோலையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த வேளை, எதிர்கொண்ட இனந்தெரியாத ஆயுததாரிகளினால் இவர் சுடப்பட்டார்.