பாலத்தீன தனி நாடுக்கு போப் ஆதரவு

pope_afp.jpgபாலத்தீன தனி நாடுக்கான தனது ஆதரவை போப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்

பாலத்தீனர்களுக்கான தனிநாடாக பாலத்தீனம் நாடு உருவாக்கப்படுவதற்கு வாத்திகனின் ஆதரவு உண்டு என்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரைப் பகுதியான பெத்லஹேமில் பிரார்தனை ஒன்றை நடத்திய பாப்பரசர் மீண்டும் வலியுறுத்தினார்.

காசாவின் மீதான இஸ்ரேலின் முற்றுகை விரைவில் அகற்றப்பட வேண்டும் என்று தாம் பிரார்த்திப்பதாக கூறிய போப்பாண்டவர், அங்கு கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்து வரும் பொதுமக்களுக்கு தமது இதயபூர்வமான ஆசிகளை தாம் அனுப்புவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த பிரார்த்தனையில், காசாவில் இருந்து வர இஸ்ரேலால் அனுமதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பாலத்தீனர்கள் கலந்து கொண்டனர். பெத்லஹேம் நகருக்கு அருகேயுள்ள ஒரு அகதிகள் முகாம் ஒன்றுக்கும் போப்பரசர் விஜயம் செய்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *