![]()
திருகோணமலை மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருக்கும் ஒரு தொகுதி மக்கள் இன்று மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்.
சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அரியமாங்கேணி தங்க நகர் சிவபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் அவர்களுடைய சொந்த வதிவிடங்களில்; குடியமர்த்தப்படவுள்ளனர். இதுதவிர மூதூர் பிரதேச செயலாளர் பிரிவைச்சேர்ந்த சந்தோசபுரம் மற்றும் சம்பூர் கிராமங்களை சேர்ந்தவர்கள் கிளிவெட்டி இடைதங்கல் முகாமிற்கும் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மீள்குடியேற்ற உதவித் திட்ட பணிப்பாளர் யூ.எல்.எம்.செரீப் தெரிவித்துள்ளார்.
மீள்குடியேற்றத்திற்காக 57 குடும்பங்களை சேர்ந்த 237 பேர் 10 பேருந்துகளில் வெருகல் ஊடாக மீள்குடியேற்ற கிராமங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டவுள்ளனர். தற்போது இவர்கள் கிரான் கிரிமுட்டி பாம் முகாம் மற்றும் மாவடி வேம்பு பலாச்சோனை சத்துருக்கொண்டான் கோயில் குளம் ஆகிய நலன் புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்