அனைத்து தமிழ்க்கட்சிகளையும் ஒதுக்கி தள்ளுங்கள் விண்ணன் கோரிக்கை !

அனைத்து தமிழ்க்கட்சிகளையும் ஒதுக்கி தள்ளுங்கள் விண்ணன் கோரிக்கை !

உள்ளூராட்சித் தேர்தலில் எந்த தமிழ்க் கட்சிகளுக்கும் வாக்களிக்க வேண்டாம். தமிழ்க் கட்சிகளை முழுமையாக புறக்கணியுங்கள். ஏற்கனவே 50 வீதம் கழுவித் தள்ளி விட்டீர்கள். மிகுதி 50 வீதத்தையும் கழுவித் துடையுங்கள் என யாழ் ஊடக மையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த தொழிலதிபர் விண்ணன் மக்களுக்கு ஆலோசனை வழங்கினார். இதேபோன்று பாராளுமன்றத் தேர்தல் சமயத்திலும் விண்ணன் முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசி என்பிபி கட்சிக்கு வாக்களிக்கும்படி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

நேற்றைய தினமான ஏப்பிரல் 30 இல் ஊடகவியலாளர்களை சந்தித்த விண்ணன் என்பிபி கட்சிக்காக வெளிப்படையாக வாக்குச் சேகரித்தார். ஊடகவியலாளர்கள் தையிட்டு விகாரை, அரசியல் கைதிகள் விடுதலை போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களில் கேட்ட கேள்விகளுக்கும் அசராது பதிலளித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *