தாவடி ஶ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஈழத்தமிழ் நடிகர் ஜெய் ஆகாஷின் படப்பிடிப்பு ! ஊழையிடும் தமிழ் தலிபான்கள் !

தாவடி ஶ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஈழத்தமிழ் நடிகர் ஜெய் ஆகாஷின் படப்பிடிப்பு ! ஊழையிடும் தமிழ் தலிபான்கள் !

தாவடியை பூர்வீகமாக கொண்ட தென்னிந்திய நடிகர் ஜெய் ஆகாஷ்ஷின் திரைப்பட படப்பிடிப்பு தாவடி ஶ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழாவில் இடம்பெற்றுள்ளது. நடிகர் ஜெய் ஆகாஷ்ஷின் பெற்றோர் இங்கிலாந்து புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். ஜெய் ஆகாஷ் லண்டனிலேயே கல்வி கற்றவர். திரைப்படம் மீதான ஈர்ப்பினால் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் ரோஜாவனம் படத்தில் அறிமுகமான ஜெய் ஆகாஷ் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக திகழும் ஜெய் ஆகாஷ் தன்னுடைய பிறந்த ஊரை மறக்காது முன்னரும் பலதடவை தாவடிக்கு வந்து ஶ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் திருவிழாக்களில் கலந்து சிறப்பித்துள்ளார். குறிப்பாக பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் சப்பரத்திருவிழா ஜெய் ஆகாஷ் குடும்பத்தினரின் உபயத்தினால் நடத்தப்பட்டு வருகின்றது. ஜெய் ஆகாஷ் தான் நடிக்கும் என்னுயிர் படத்தின் பாடல் காட்சியை தான் பிறந்த மண்ணில் தன்னுடைய குல தெய்வம் கோயிலில் படம் படிக்க விரும்பி, கோடியேற்ற தினத்தில் அதனை நிகழ்த்துவதாகவும் ஏ வன் ட்றவலிங் (A one Traveling) என்ற யுரீயூப் சனலுக்கு கோயில் முன்றலில் வைத்து விளக்கமளித்துள்ளார்.

அதேநேரம் பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பி வரும் ஊழல் ஒழிப்பு அணி வன்னி ஜெய் ஆகாஷின் திரைப்பட பாடல்க்காட்சி படப்பிடிப்பை தனது போலி முகநூலில் பகிர்ந்து, அப்பாடல் காட்சியில் தோன்றும் பெண் நடனக் கலைஞர்களை அவதூறாக சித்தரித்து எழுதியுள்ளது. ஊழல் ஒழிப்பு அணி வன்னியின் பதிவிற்கு பல அறிவிலிகள் தம்முடைய பங்கிற்கும் மோசமான கருத்துக்களை பின்னூட்டலாக இட்டுள்ளார்கள். பெண்களுக்கு எதிரான இணைய வன்முறையை தேசம் நெற் தொடர்ந்து வெளிப்படுத்தியும் கண்டித்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *