ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி ஐஎஸ்ஐஎஸ் சஹ்ரான் ஹாஷிம் ! உதய கம்மன்பில

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி ஐஎஸ்ஐஎஸ் சஹ்ரான் ஹாஷிம் ! உதய கம்மன்பில

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரி யார் என அமெரிக்காவின் எஃப்பிஐ ஆதாரபூர்வமாக நிரூபித்து விட்டது. அது வேறு யாருமல்ல தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாஷிமும் நெளபர் மொளலவி என்றும் உதய கம்மன்பில கூறுகிறார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் பிள்ளையானிடம் கட்டாய வாக்கு மூலத்தை வாங்கி ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியென வேறுயாரோ ஒருவரை பலியாக்க இருப்பதாகவும் கம்மன்பில குறிப்பிட்டார். தான் ஒற்றை மனிதனாக பிள்ளையானை சந்தித்து அரசாங்கத்தினுடைய வேடத்தை கலைத்த வீரன் ராம்போவாக உருவெடுத்திருப்பதாகவும் பெருமிதம் அடைந்தார்.

இனவாதியான கம்மன்பில இராணுவ துணைப்படையாக இருந்து பல கொலைகளில் மற்றும் கடத்தல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படலில் சம்பந்தப்பட்ட பிள்ளையானை நாட்டைக் காப்பாற்றிய தேசபக்தன் என உதய கம்மன்பில பாராட்டி வருவதை அமைச்சர் கண்டித்தமை தெரிந்ததே.

ஒரு பக்கம் ஈஸ்டர் தாக்குதலில் இந்தியாவின் பங்கு என்ன? எனவும், அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற கோத்தபாய மற்றும் ராஜபக்ச குடும்பத்தின் சதியெனவும் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நகருகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *