புளியம்பொக்கணை வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கஞ்சா மீட்பு !
ஏப்பிரல் 16 பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலிd; mடிப்படையில் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் 85 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கிளிநொச்சி புளியம் பொக்கணை இடம்பெற்றுள்ளது. வாகனம் ஒன்றில் நுட்பமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. பளையை சொந்த இடமாகக் கொண்ட சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் கஞ்சா வியாபாரத்திற்காக புளியம் பொக்கணை நாகேந்திரபுரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.