விரைவில் வடமாகாண காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் – அமைச்சர் பிமல்

விரைவில் வடமாகாண காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் – அமைச்சர் பிமல்

 

“ மன்னார் மறிச்சுக்கட்டி முதல் காங்கேசன்துறை வரை மக்களுக்குச் சொந்தமான காணிகளை படையினர், நிறுவனங்கள் மற்றும் சில தனியார்கள் தமதாக்கிக் கொண்டுள்ளனர். இப்போது இது குறித்து ஆராய்ந்து முடிவு செய்யக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகவே காணிச் சொந்தக்காரர்களிடமே அவர்களது காணிகளை மீண்டும் ஒப்படைப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து பெருந்தெருக்கள் , துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்யாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி மன்னாரில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் வடக்கில் மூன்று பெரிய கைத்தொழிற்பேட்டைகளை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வில்பத்து ஊடாகச் செல்லும் பாதையை விரைவில் திறப்பதாகவும் வாக்குறுதியளித்துள்ளார். அத்தோடு வடக்கில் தேசியப் பிரச்சினையொன்றுள்ளது என்பதை ஏற்றுக் கொண்ட அவர், மன்னார் மாவட்டத்தில் வாழும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒருங்கிணைத்து அவர்களுடைய பிரச்சினைகளை தீர்க்கும் வேணவாவுடன் அரசு இருப்பதாகம் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *