என்னதான் போராடினாலும் அரச வேலை தர முடியாது – அமைச்சர் லால் கந்தா !
வேலை இல்லாதவர்களுக்கு அரசே வேலை வழங்கும் என்ற நாட்டின் இதுவரையான கொள்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதேநேரம் அரசு தலையிட்டு வேலைவாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். இதனால் தான் அவர்கள் அரசே வேலை தர வேண்டும் என்று கோரி பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். அப்படியே எல்லோரையும் அரச பணியில் சேர்க்க முடியாது என அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்துள்ளார்.
நிலைமை இவ்வாறிருக்க யாழ் பல்கலைக்கழகம் உட்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் தங்களுக்கு இலவசக் கல்வியும் வேண்டும் அரச வேலையும் வேண்டும் ஆனால் 5ம் வகுப்பு மாணவர்கள் எழுதக் கூடிய புலமைப்பரிசில் பரீட்சை போட்டிப் பரீட்சையும் இல்லாமல் வேலை தர வேண்டும் என்று கோருகின்றனர்.