டெஸ் பிறவுண் இந்தியாவுக்கு அவசர விஜயம்

browne_.jpgபிரிட்டனின் இலங்கைக்கான விசேட பிரதிநிதியும் அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான டெஸ் பிறவுண் அவசரமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அவர் இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.

பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள 50 ஆயிரம் மக்களின் பாதுகாப்பே மிகவும் முன்னுரிமைக்குரிய விடயம். தற்போது இலங்கையில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதத்தைக் கண்காணிப்பது அவசியம். அதேவேளை, இடம்பெயர்ந்துள்ள 2 இலட்சம் மக்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும். மேலதிக வளங்கள் தேவை, சர்வதேச மனிதாபிமான அமைப்புகளுக்கு விசா வழங்கப்படவேண்டும் என்று பேச்சுக்களின் பின்னர் அவர் கருத்துத் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *