இராணுவத்தில் இருந்து தப்பியோடிய போது கைது செய்யப்பட்டிருந்த 650 பேருக்கு வெசாக் தினத்தையிட்டு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த பொதுமன்னிப்பை வழங்கியுள்ளார். இதன்படி நேற்று 650 பேரும் சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் லக்ஷ்மன் சில்வா தெரிவித்தார்.
வெலிகட சிறையிலிருந்து 165 பேரும், அநுராதபுரத்திலிருந்து 88 பேரும், போகம்பரயிலிருந்து 90 பேரும், வீரவிலயிலிருந்து 64 பேரும், குருவிட்ட சிறையிலிருந்து 47 பேரும், பல்லேகலயிலிருந்து 37 பேரும் உட்பட 650 பேர் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.