இலங்கை விவகாரம் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை (மே 11) ஐ.நா.பாதுகாப்புச் சபையில் கூட்டமொன்றை நடத்துமாறு பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னரும் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் மில்லிபான்ட்டும் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. நியூயோர்க்கில் மே 11 இல் தாங்கள் இருவரும் பிரசன்னமாகியிருக்கும் சமயத்தில் இக்கூட்டத்தை நடத்துமாறு அவர்கள் இருவரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக இன்னர் சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தி ஆய்வின் அடிக்குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறது.