மோதல் பகுதியிலிருந்து 3000 கர்ப்பிணித் தாய்மார் வெளியேற்றம் : ஐ.நா. சனத்தொகை நிதியம் தகவல்

_mullai_1.jpgவடக்கில் மோதல் நடைபெற்று வரும் பகுதிகளிலிருந்து சுமார் மூவாயிரம் கர்ப்பிணித் தாய்மார்கள் வெளியேறியுள்ளதாக ஐ.நாவின் சனத்தொகை நிதியம் தகவல் வெளியிட்டுள்ளது.

இவர்களில் சுமார் 350 பேர் அடுத்த மாதம் குழந்தைகளைப் பிரசவிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இடம் பெயர்ந்துள்ள மக்களின் வருகை அதிகரிப்பினால் சுகாதார சேவைகளில் எதிநோக்கும் சவால்களும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், பெண்கள் மற்றும் யுவதிகளின் சுகாதாரம், பாதுகாப்பு தொடர்பாக, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பான உதவிகளை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாகவும் ஐ.நாவின் சனத்தொகை நிதியம் கூறுகின்றது.

குறிப்பாக குழந்தைகளைப் பிரசவிக்கும் பெண்களில் 15 சதவீதமானவர்கள் இரத்தம் வழங்குதல் அல்லது அவசர சத்திர சிகிச்சை பராமரிப்பு மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்கள், மரணம் போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என்றும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *