வவுனியா, மதகு வைத்தகுளம் மீள்குடியேற்ற கிராமத்தில் குழாய் மூலம் நீர் விநியோகிக்கும் திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
34 ஆயிரம் லீட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த் தாங்கி அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு 12 மில்லியன் ரூபாய் செலவாகியதென திட்டத்தை நடைமுறைப்படுத்திய தேசிய பால்நிலை சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் வி. சி. மகேந்திரன் தெரிவித்தார்.
ஒக்ஸ்பாம் அமைப்பு நிதி உதவியினை வழங்கியிருந்தது. 270 குடும்பங்கள் இந்த கிராமத்தில் வசிக்கின்றனர். 110 குடும்பங்கள் குழாய் மூலம் நீர் பெறுவதற்கான இணைப்புக்களைப் பெற்றிருந்தன. நேற்று முன்தினம் காலை 11 மணிளயவில் வைபவ தியாக குடிநீர் விநியோகத் திட்டத்தை வவுனியா பிரதேச செயலாளர் எஸ். சிவபாலசுந்தரன் ஆரம்பித்து வைத்தார். நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொறியியலாளர் ஒக்ஸ்பாம் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் உட்பட அதிகாரிகளும் கிராம மக்களும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர். கடந்த காலத்தில் இந்த கிராமத்து மக்கள் நீரை பெறுவதற்கு நீண்ட தூரம் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.