அரச ஊழியர்களுக்கு ஹோமாகமையில் வீடமைப்புத் திட்டம்

ferail_asrof.jpgஅரச ஊழியர்களுக்கென ஹோமாகமை மவுன்ட் க்ளிபர்ட் மற்றும் ஜல்தர ஆகிய பகுதிகளில் மஹிந்த சிந்தனையின் ஜனசெவன திட்டத்தின் கீழ் 850 வீடுகள் அமைப்பதறகு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

சீன அரசாங்கம் இத்திட்டத்திற்கு 160 மில்லின் யுவானை நிதியுதவியாக வழங்குவதுடன் இலங்கை அரசாங்கம் இத்திட்டத்திற்கு 600 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.  இத்திட்டத்தை எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பித்து 30 மாதங்களில் பூர்த்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *