அக்கினி நட்சத்திரம் பூமி – சூரியன் நேர் கோட்டில்; 28 வரை உஷ்ணம் உச்சத்தில்

தற்போது நாட்டில் நிலவி வரும் உஷ்ணமான காலநிலை எதிர்வரும் 28ஆம் திகதி வரை சற்று அதிகரித்தே காணப்படும். மே மாதம் நேற்று எட்டாம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இந்த அதிகரித்த உஷ்ணமான காலநிலை நிலவும். குறிப்பாக மே 8ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை சூரியனும் பூமியும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதாலேயே இந்த உஷ்ண நிலை சற்று அதிகரிப்பதற்கு ஏதுவாகிறது.

சூரியனும் பூமியும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதை சோதிட வல்லுநர்கள் அக்னி நட்சத்திர காலம் என கூறுவர்.

தற்போது இலங்கையில் 33, 34 செல்ஷியல் வெப்ப நிலை இருக்கின்ற போதும் குறிப்பிட்ட அக்னி நட்சத்திர காலப் பகுதிக்குள் சுமார் 36, 37 செல்ஷியஸ் வரை அதிகரிக்கலாம். இக்காலப் பகுதியில் இந்தியாவில் கூடுதலான வெப்ப தாக்க மரணங்களும் (Sun strok) ஏற்படலாம். இதுவரை அங்கு சுமார் 10 மரணங்கள் வரை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான வெப்பதாக்க மரணங்கள் இலங்கையில் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் மிக குறைவாகவே உள்ளன. குறிப்பாக இலங்கையில் நாலாபுறமும் கடலால் சூழப்பட்டிருப்பதாலேயே இவ்வாறு நிகழ்வதில்லை. இருப்பினும், தற்போது காலநிலை மாற்றத்தால் கடலின் உஷ்ண நிலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. இதனால் எந்நேரமும் அதிக வியர்வை, புழுக்கம் ஏற்படும். இந்த நிலை மாறவேண்டுமாயின் கடும் மழை பெய்வது மிக முக்கியமாக உள்ளது. கடலிலிருந்து உஷ்ணக் காற்று வீசுவதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.கடலின் உஷ்ண நிலை சுமாராக 24 செல்ஷியஸ¤க்கு குறைவாகவே காணப்பட வேண்டும். எனினும் தற்போது கடலின் உஷ்ணநிலை 29 முதல் 31 வரையிலான ஷெல்சியஸில் இருப்பதும் ஒரு காரணமாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *