20 வருடமாக பல்லைகழக மாணவிகளிடம் பாலியல் சேட்டை செய்த விரிவுரையாளர் தலைமறைவு !
உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகத்தில் 20 வருடமாக பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் பல மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து காணொளி எடுத்த சம்பவம் அரங்கேறியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறித்த பேராசிரியர் தற்போது தலைமறைவாகியுள்ளார். கமுதுகலை கல்லூரியில் புவியியல் துறையின் தலைவராக (HOD) உள்ள ரஜ்னீஷ் குமார் என்ற பேராசிரியரே கடந்த சனிக்கிழமை அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் காவல்துறை நடவடிக்கை எடுப்பதை அறிந்ததும், ரஜ்னீஷ் குமார் தலைமறைவாகியுள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளர்கள் மாணவிகளிடம் அத்துமீறும் போக்கு தொடர்வதை தேசம்நெட் தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறது.