தென்னாபிரிக்கர்களை போல நாம் ஒருவரை ஒருவர் மன்னிக்கப்பழக வேண்டும் – புத்த சாசன அமைச்சர் சுனில் செனவி 

தென்னாபிரிக்கர்களை போல நாம் ஒருவரை ஒருவர் மன்னிக்கப்பழக வேண்டும் – புத்த சாசன அமைச்சர் சுனில் செனவி

இலங்கைக்கு உண்மை மற்றும் மன்னிப்பு ஆணைக்குழு தேவை, அதே நேரத்தில் இலங்கையை ஒரு வானவில் தேசமாக மாற்ற வேண்டும் என்று மத விவகாரங்கள் மற்றும் புத்த சாசன அமைச்சர் சுனில் செனவி நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்தார்

வரவுசெலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பேசிய அமைச்சர் சுனில் மேலும் தெரிவிக்கையில், உண்மை மற்றும் மன்னிப்பு ஆணைக்குழுவை நிறுவுவதில் எனது அமைச்சகம் முக்கிய பங்கு வகிக்கும். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவைப் போல இலங்கையும் ஒருவருக்கொருவரை மற்றையவர் மன்னிக்க வேண்டும். ஏப்ரல் 21 ஆம் திகதி நெருங்கி வருகிறது, அன்று தேவாலயங்களைத் தாக்கியவர்களை கிறிஸ்தவர்கள் மன்னிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *