யுரியூப்பர் கிருஷ்ணா வடக்கு கிழக்கின் பிரபல கேடி – கில்லாடி யானார் ! மனித உரிமை ஆணைக் குழுவும் அவரைத் தேடுகின்றது ! பா உ அர்ச்சுனாவின் முன்னாள் சட்டத்தரணியும் தேடுகின்றார் !
யூரியூபில் உதவி செய்யும் காணொளிகளை பதிவேற்றும் “SK vlog“ என்ற யூரியூப் பக்கத்தின் உரிமையாளரான கிருஷ்ணா என்பவர் ஒரு வீட்டினுள் நுழைந்து உதவி செய்வதற்காக வந்துள்ளேன் என கூறி பாடசாலை சிறுமி ஒருவரை வற்புறுத்தி காணொளி எடுக்க முயலும் காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில், நீங்கள் நடிக்க கூடாது; நீர் என்ன பெரிய நடிகையோ; அழுதா தானே நிறைய உதவிகள் வரும் போன்ற வார்த்தைகளையும் பேசுகிறார்.
யூரியூபர் S K கிருஷ்ணா வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களின் காணொளிகளை தனது யூரியூப் பக்கத்தில் பதிவேற்றி, புலம்பெயர் மக்களிடம் பணம் பெற்று அதன் மூலம் உதவி செய்வதாக காண்பித்து வருகின்றார். அவ்வாறு காணொளிகளை பதிவு செய்யும்போது உதவி பெறுபவர்களின் மனம் நோகும்படியாக பேசுவது, அவர்களை எள்ளி நகையாடுவது, இளம் பிள்ளைகளை வற்புறுத்தி காணொளிக்கு அழைப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இவ்விடயம் தொடர்பில் தேசம்நெற் சில தடவைகள் எச்சரித்து காணொலிகளையும் வெளியிட்டு வந்திருந்தது. அண்மையில் எஸ் கே கிருஷ்ணாவையும் அம்பலப்படுத்தி இருந்தோம். தற்போது இச்செய்தி தற்போது பாராளுமன்ற உறுப்பினார் அர்ச்சுனாவால் பாராளுமன்றத்திலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கு முன்னரே சமூக வலைத்தளங்களும் இப்பிரச்சினையை வேகமாகப் பரவி வருகின்றறது.
இதற்கிடையே மனித உரிமை ஆணைக்குழுவும் இவர் பற்றிய தகவலைக் கோரியுள்ளது. தற்போது இலங்கைத் தமிழரின் கேடி – கில்லாடியாகி விட்டார். எஸ் கே கிருஷ்ணாவின் செயற்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டத்தரணி எஸ்.செலஸ்ரின் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் விபரங்களை திரட்டி அவர்களிடம் விசாரணைகளை நடாத்துவதற்கான நடவடிக்கைகளில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகமும் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த யூடியூப்பரின் மோசடி மற்றும் முகஞ்சுழிக்க வைக்கும் செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்றையதினம் எம்.பி இராமநாதன் அர்ச்சுனா சுட்டிக்காட்டி பேசியதுடன் இவர்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள யோகு அருணகிரி, இவரைப் போன்ற கேடி – கில்லாடிகளை புலம்பெயர் தமிழர்களே உருவாக்குவதாகக்தன்னுடைய முகநூல் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்: “யுடீப்பர் என்னும் கழிசடைகள் உலகத்தை வளர்த்து விட்டது அதிகமாக புலம்பெயர் புடுங்கிகள் தான், தங்களின் வெட்டி பந்தாக்கும், பெயர், புகழுக்கும், நாலு பேருக்கு சோத்த போட்டுட்டு நாலாயிரம் பேர் லைக் பண்ணனும் என்ற தற்புகழ்ச்சி கோஷ்டிகளை முதலில் காயடிச்சு விடனும்….
அப்பத்தா சொல்லும் வலக்கை கொடுத்தா இடக்கைக்கு தெரியக்கூடாது என அப்படித்தான் தானம், தர்மம், புண்ணியத்தில் சேரும், ஏழு தலைமுறை வாழும் என… நம்ம பெயரும் ரீவியில் வரணும் நாலு பேர் நம்மையும் மனிதாபிமான ஆள், ஊருக்கு உதவுற மனம் வள வளா குறுப் தான் இப்படியான குறை பீடிக்கும் இல்லாமல் திரிச்சதுகளை தேடி பிடிச்சு அதுகளுக்கு சில்லறையை சிதற விட்டு வளர்த்து விட்டுட்டு இப்ப கதறி என்ன பயன்….” என்கிறார் யோகு அருணகிரி.