கல்வி: நேரகாலம் தெரியாமல் வட்ஸ்அப்பில் வீட்டுவேலை வழங்குவதை நிறுத்துங்கள் !
சில ஆசிரியர்கள் நேரகாலம் தெரியாமல் வட்ஸ்அப்பில் மாணவர்களுக்கு வீட்டுவெலைகளை அனுப்பி பெற்றோரைத் தொந்தரவு செய்வதாக பரவலாக முறைப்பாடுகள் வந்தள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகின்றது. இவ்வாறு நேரகாலம் தெரியாமல் வட்ஸ்அப்பில் வீட்டுவெலைகளை அனுப்புவதை ஆசிரியர்கள் நிறுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கப் பொதுச்செயலாளர் ஸ்ராலின் ஜோசப் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் பயிற்சிகள், விளக்கங்கள் மாணவர்களுக்கு நேரடியாக முகத்துக்கு முகம் பார்த்து வழங்கப்பட வேண்டும். இவ்வாறான காலநேரமற்ற வட்ஸ்அப்கள் அனுப்பப்பட்டால் அது பற்றிய முறைப்பாடுகளை பதிவுசெய்யுமாறு அவர் பெற்றோரைக் கேட்டுக்கொண்டுள்ளார். கல்வி அமைச்சு ஏற்கனவே நேரகாலம் பராது வட்ஸ்அப் மூலம் வீட்டுவெலைகள் அனுப்புவது தொடர்பில் ஆசிரியர்களுக்க அறிவுறுத்தல்களை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.