நாங்கள் ஆட்டுத் தோல் போர்த்திய புலிகள் இல்லை ! நாமல் ராஜபக்ஷ
பாதாள உலகக் கும்பலை கைது செய்ய பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்த மாட்டோம் என கூறிவிட்டு வடக்கு மற்றும் தெற்கில் முகநூல் பதிவுகளுக்காக இளைஞர்களை கைதுசெய்ய பயங்கரவாத தடை சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்துகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விமர்சித்துள்ளார்.
இவ்வாறு அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக விமர்சித்துள்ள அவர், இந்த அரசாங்கம் பயங்கரவாதத் தடை சட்டத்தை இல்லாமல் செய்யும் என்ற நம்பிக்கையில் வடக்கு கிழக்கு மக்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். அரசாங்கம் அவர்களை ஏமாற்றியுள்ளது. எங்களுடைய கட்சி பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்டங்களை ஆதரிப்பதாகவும் நாங்கள் அதில் வெளிப்படையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மற்றவர்களை போல நாங்கள் ஆட்டுத் தோல் போர்த்திய புலிகள் இல்லை எனவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.