புலமைப்பரிசில் மாணவரை ஊக்குவிக்க விசேட திட்டம்

sri-lankan-schools.jpgஏறாவூர் பிரதேச பாடசாலைகளில் இருந்து இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்¨ச்ககுத் தோற்றவுள்ள மாணவர்களை ஊக்குவிப்பதற்கான விசேட வேலைத்திட்மொன்றினை ஏறாவூர் கோட்டக் கல்வி அலுவலகம் மேற்கொண்டுள்ளது.

இதன் பிரகாரம் கோட்ட கல்வி அலுவலகத்தினால் நடத்தப்பட்ட முன்னோடி புலமைப்பரிசில் பரீட்சையில் 100 இற்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்ற 144 மாணவர்கள் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களை ஊக்குவிப்பதன் மூலமாக கற்றல் நடவடிக்கைகளில் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தி சித்தியடையும் வீதத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன் இந்த பரிசளிப்பு வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டதாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ. எல். இஸட். ஆப்தீன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வி. அமீர்தீன் தனது கல்வி அபிவிருத்தி நிதியத்தின் மூலமாக மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *