இனமுரண்பாட்டை பயங்கரவாதத்திற்கு எதிரான போரென சித்திரிப்பதாக பிரிட்டன் ஆயர் விசனம்

uk-london.jpgஇலங் கைத் தமிழர்களுடனான இனமுரண்பாட்டை பயங்கரவாதத்திற்கு எதிரான போரென இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சித்திரிப்பதாக பிரிட்டனின் போர்ட்ஸ்மௌத் ஆயர் விமர்சித்துள்ளார்.  லண்டனின் பிரபுக்கள் சபையில் கேள்வி நேரத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே போர்ட்ஸ்மௌத் ஆயர் ஹென்னத் ஸ்ரீவென்சன் ஜனாதிபதி ராஜபக்ஷவை விமர்சித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டின் புராதன மக்கள். அங்கு அவர்களுக்கு இன, மத ரீதியான முரண்பாடுகள் உள்ளதுடன் இது ஒரு புதிய விடயம் அல்லவெனவும் ஆயர் ஸ்ரீவென்சன் கூறியுள்ளார். அத்துடன், பயங்கரவாதத்தின் மீதான போர் என்ற பதமானது நவீன பிதற்றல் முறையின் ஓர் அம்சமென இச்சபையில் உள்ளோரும் வெளியில் உள்ளோரும் நன்கறிவரெனவும் ஆயர் ஸ்ரீவென்சன் தெரிவித்தார்.

இந்நிலையில், அங்கு கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சக அதிகாரி மல்லோச் பிரௌண்; ஆயரின் கருத்துடன் ஒத்துப்போகும் அதேவேளை, பயங்கரவாதத்தின் மீதான போர் என்ற வார்த்தை வழக்கத்துக்கு மாறான சொல் என்பதுடன் தந்திரோபாயச் செயற்பாட்டுக்காக பயன்படுத்தும் ஓர் சொற்றொடருமாகும்.

இலங்கையில் புராதன இரு இனங்களிடையேயான சச்சரவே இதுவென்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. ஆனால், இச்சச்சரவு தற்பொழுது வன்முறைகள் அதிகம் நிறைந்த சண்டையாக மாறியுள்ளதுடன் இருதரப்பும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *