தெற்கில் வலைத்தளங்களில் நிதி திரட்டிய இருவர் கைது – வடக்கில் எப்போது..? 

தெற்கில் வலைத்தளங்களில் நிதி திரட்டிய இருவர் கைது – வடக்கில் எப்போது..?

 

லிட்டில் ஹார்ட்ஸ்’ என்ற போலி கணக்கின் மூலம் சமூக வலைகளில் 2.9 மில்லியன் ரூபா மோசடி செய்ததற்காக சமூக ஆர்வலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி கணக்கின் மூலம் நன்கொடைகளை வசூலிப்பதன் மூலம் சந்தேக நபர்கள் பொதுமக்களை ஏமாற்றியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தென்னிலங்கையில் மட்டுமன்றி வடக்கிலும் நன்கொடை என்ற பெயரில் கோடி ரூபாய்கள் வரை மோசடி செய்யப்படுவதும் கவனிக்கத்தக்கது. யூடியூப் அல்லது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற தளங்களில் தங்களை தமிழ்தேசியவாதிகளாகவும், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி தொகைகள் வழங்குவதாகவும் கூறி பலர் புலம்பெயர் தேசங்களில் வசிப்போரிடம் இருந்து நிதி உதவிகளை பெற்று மோசடியில் ஈடுபடுவதுடன் குறித்த பணத்தை பயன்படுத்தி ஆடம்பரமான வாகனங்கள், வீடுகள் கூட கட்டும் அசம்பாவிதங்கள் தமிழர்கள் பகுதிகளில் அண்மை காலமாக நடந்தேறுவதையும் பல தரப்பினரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

ஆறுதிருமுருகனின் உறவுகளால் நிர்வகிக்கப்படும் சிவபூமி நிறுவனமும் கோடிக்கணக்காண பணத்தையும் சொத்துக்களையும் புலம்பெயர் தேசங்களிலும் தாயகத்திலும் திரட்டி வருகின்றது. ஆனால் இவற்றுக்கான முறையான பொறுப்புக் கூறல் இல்லாததுடன் ஆறுதிருமுருகன் தனது புகழுக்காக வினைத்திறனற்ற செயற்திட்டங்களில் நிதியைச் செலவிட்டு வருவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *