டாக்டர் அம்பேக்கார் வழியில் யாழில் 5 கிராமங்களில் பௌத்த பாடசாலைகள் உள்ளது ! விகாரையும் உள்ளது !
தமிழ் தேசியவாதிகளால் நூற்றாண்டு காலங்களாக ஒடுக்கப்படும் தமிழ் சமூகங்களுக்கும் உரிமைகள் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டதும் பௌத்தம் அதனால் தான் ஒடுக்கப்பட்ட மக்களின் கிராமங்களில் பௌத்த மதப் பாடசாலைகள் உருவாக்கப்பட்டு அம்மக்கள் ஒடுக்குமுறையிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டனர் எனத் தெரிவிக்கின்றார் டென்மார்க் சமூக ஜனநாயகக் கட்சியின் பிரமுகர் தர்மு தர்மகுலசிங்கம். இவர் நேற்று தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் கரவெட்டி கன்பொல்ல, புத்தூர் உட்பட 5 கிராமங்களில் பௌத்த மதப் பாடசாலைகள் அமைக்கப்பட்டதாகவும் கரவெட்டி கன்பொல்ல கிராமத்தில் பௌத்த விகாரைக்கான இடம் தேசிய பௌத்த சங்கத்திடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
டொனால் ட்ரமின் பாணியில் அதிதீவிர வலதுசாரித்துவம் பேசும் தமிழ் தேசியவாதிகள் சிங்கள பேரினவாதிகளோடு சேர்ந்து மீண்டுமொரு இனக்கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் செய்ய முனைவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட சமூகங்களை ஒடுக்கி வாழ்பவர்கள், இவர்கள் யாருக்கும் மனித உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு எவ்வித தகுதியும் இல்லை எனத் தெரிவித்தார் தர்மு தர்மகுலசிங்கம்