“ஒருசில தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விரும்புவதில்லை – எதிர்க்கட்சியின் ஹேஷா விதானகே !

“ஒருசில தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விரும்புவதில்லை – எதிர்க்கட்சியின் ஹேஷா விதானகே !

“ஒருசில தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விரும்புவதில்லை. பிரச்சினைகளை வளர்த்தெடுக்கவே பார்க்கிறார்கள். இதனால் தான் நிரந்தர தீர்வு எடுக்கவில்லை” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மேலும் இதுதொடர்பாக பேசிய அவர், புதிய அரசாங்கத்தில் மலையக பெண் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். பெருந்தோட்ட மக்களுக்கு தற்காலிக தீர்வு வழங்காமல், நிரந்தர தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை எதிர்காலத்திலும் அரசியலுக்கு பயன்படுத்துவதை இனியேனும் நிறுத்த வேண்டும்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அரசியல் பொம்மைகளாக்கி அதனூடாக ஆட்சியை கைப்பற்றும் செயற்பாடுகள் மாத்திரமே இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் ஆதரவு இருந்தால் வெற்றிப் பெற முடியும் என்று குறிப்பிட்டுக் கொண்டு அவர்களுக்கு பிரத்தியேக கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அமைச்சுக்களும் ஸ்தாபிக்கப்பட்டன. ஆனால் உறுதியான தீர்வு கிடைக்கவில்லை.

பெருந்தோட்ட மக்களை லயன் அறையில் இருந்து வெளிக்கொண்டு வந்து அவர்களை முழுமையான சுதந்திரத்துடன் வாழ வைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்தால் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *