சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழில் இலங்கை தேசியகீதம் !
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும் எனவும் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்படும் பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதிஒதுக்கப்பட்டள்ளது. சுதந்திர தின நிகழ்வில் வாகன அணிவகுப்பு இல்லை. தேசிய கொடியை ஏந்திச் செல்வதற்காக விமானப்படையின் 3 உலங்கு வானூர்திகள் மாத்திரம் பயன்படுத்தப்படும் எனவும் நிர்வாக அமைச்சர், மரியாதை அணி வகுப்புக்களில் பங்கேற்கும் படைவீரர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அரசாங்க காலங்களில் சுதந்திர தின விழாவுக்கான செலவுகள் 250 மில்லியன் தொடங்கி 375 மில்லியன் வரை செலவிடப்பட்டிருந்தது. மேலும் 2018ஆம் ஆண்டு முதல் சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாத சூழல் நீடித்து வந்ததுடன் கடந்த ஆண்டு, நிகழ்வுகளின் இறுதியில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது