உலக சந்தைக்கு எண்ணெய் வழங்கும் நாடாக இலங்கையை மாற்றுவோம் – மத்திய கிழக்குக்கு விரைவில் பயணமாகிறார் ஜனாதிபதி அனுர !

உலக சந்தைக்கு எண்ணெய் வழங்கும் நாடாக இலங்கையை மாற்றுவோம் – மத்திய கிழக்குக்கு விரைவில் பயணமாகிறார் ஜனாதிபதி அனுர !

நாட்டுக்கு தேவையான எண்ணெய் விநியோகத்துக்கு திருகோணமலையில் உள்ள 99 எண்ணெய் தாங்கிகள் தேவைக்கு அதிகமானவை என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

1 மில்லியன் மெட்ரிக் தொன் மொத்த சேமிப்புத் திறன் கொண்ட 99 தொட்டிகளைக் கொண்ட திருகோணமலை வளாகம், 1960 களில் பிரிட்டிஷ் நிறுவனத்திடம் இருந்து கையகப்படுத்தப்பட்டதிலிருந்து பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

திருகோணமலைக்கு இவ்வளவு எண்ணெய் தாங்கிகள் தேவையில்லை. பிராந்திய எண்ணெய் விநியோகத்திற்கு 24 எண்ணெய் தாங்கிகள் இருந்தால் போதுமானது. 24 ஐ எமது பெற்றோலிய கூட்டுத்தாபணத்திற்கு எடுத்துகொண்டு ஐ ஓ சி க்கு 10 எண்ணெய் தாங்கிகளை ஒதுக்கினோம். எமக்கு 61 எண்ணெய் தாங்கிகள் எஞ்சின. திருகோணமலையில் மேலதிகமாக உள்ள 61 எண்ணெய் தாங்கிகளை , இந்திய நிறுவனமும் பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனமும் இணைந்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணித்து எண்ணெய் தாங்கிகளில் சேமித்து வைத்து உலக சந்தைக்கு எண்ணெய் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

இதேவேளை, ஜனாதிபதி விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு நன்மை பயக்கும் வகையிலான ஒப்பந்தங்கள் மூலம் எரிபொருளை இலங்கைக்கு கொண்டு வருவதில் தொடர்பில் இந்த கலந்துரையாடல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *