மாவீரர்களுக்கு மாபெரும் கோயில் கட்டுவேன் ! ஐ.பி.சி பாஸ்கரன் – முதலமைச்சராக்குவார்களா வடக்கு தமிழர்கள் ?

மாவீரர்களுக்கு மாபெரும் கோயில் கட்டுவேன் ! ஐ.பி.சி பாஸ்கரன் – முதலமைச்சராக்குவார்களா வடக்கு தமிழர்கள் ?

இல்லாத தெய்வங்களுக்கு கோயில் கட்டுவதை விட எங்களுடைய மாவீரர்களுக்கு என ஓர் ஆலயம் கட்டுவேன் என ஐ.பி.சி பாஸ்கரன் தெரிவித்துள்ளார். ஐ.பி.சிக்கு வழங்கிய சுயதம்பட்ட நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

சைக்கிள் கஜா – கஜா குழுவினரின் உசுப்பேற்றும் அரசியலை ஐ.பி.சி பாஸ்கரனிடமும் எதிர்பார்க்க முடியும் என பல தரப்பினரும் தெரிவித்து வரும் நிலையில் பாஸ்கரனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. குமார் பொன்னம்பலத்திற்கு அண்மையில் மாலை அணிவித்த ஐபிசி பாஸ்கரன் முதலமைச்சராவதற்கான தடங்களை பதிக்க ஆரம்பிக்கின்றார்.

ஐ.பி.சி தமிழ் மற்றும் ரீச்சா பார் உரிமையாளரான பாஸ்கரன் தனது முதலைமைச்சர் கனவை நோக்கி படிப்படியாக நகர ஆரம்பித்துள்ளார். இது தொடர்பில் தேசம்நெட் பல தடவைகள் பதிவு செய்துள்ளது.

தமிழரசுக்கட்சியில் தனக்கு ஏதேனும் தேறுமா என எதிர்பார்த்த போது முன்னாள் பா.உ சுமந்திரனின் ஆதிக்கத்தால் தமிழரசுக்கட்சி பாஸ்கரனை தூரப்படுத்தியிருந்ததது. இதனை தொடர்ந்து சுமந்திரனை தமிழ்தேசியத்துக்கு எதிரானவராகவும் பா.உ சிறீதரனை மீட்பர் போலவும் ஐ.பி.சி உட்பட பாஸ்கரனின் ஊடகங்கள் காட்சிப்படுத்தி வருகின்றன.

தற்போது, மாகாண சபை தேர்தல்கள் தொடர்பான அறிவிப்புக்கள் வெளியாகிவரும் நிலையில் தனது அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்ய முன்னணியின் கஜா – கஜா குழுவினருடன் கைகோர்த்துள்ளார் பாஸ்கரன். படுகொலை செய்யப்பட்ட குமார் பொன்னம்பலத்தின் 25வது ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டு இதை உறுதிசெய்திருந்தார்.

புலிகளின் பெயரை சொன்னாலே ஒருவருடைய பின்புலம் – மக்களுக்கான கடந்த கால அரசியல் செயற்பாடுகள் ஆகியவற்றை கவனத்தில் கொள்ளாமல் அரசியல் அதிகாரங்களை தூக்கி கொடுத்துவிடுமளவிற்கு வடக்கு மக்கள் உள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி காய் நகர்த்துகிறார் ஐ.பி.சி பாஸ்கரன் என அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *