கூட்டுக் களவாணிகள்: மருத்து மாபியாக்களும் ஊடகவியலாளர்களும் – சிஐடி விசாரணைகளை நாடும் சுகாதார அமைச்சு 

கூட்டுக் களவாணிகள்: மருத்து மாபியாக்களும் ஊடகவியலாளர்களும் – சிஐடி விசாரணைகளை நாடும் சுகாதார அமைச்சு !

மருந்து மாபியா நிறுவனங்களிடமிருந்து மாதந்தோறும் சம்பளம் பெற்று, தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஊடகவியலாளர்கள் இருப்பதாகவும், இது தொடர்பான உண்மைகளை கண்டறிந்த பின்னர் குற்றப் புலனாய்வுத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துறைபிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இந்த பத்திரிகையாளர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திற்குப் பதிலாக சேவைகளை வழங்கும் மருந்து நிறுவனங்களிடமிருந்து சம்பளம் பெறுகிறார்கள் என்றும், பணத்திற்கு ஈடாக பல்வேறு பொய்யான செய்திகளைப் பரப்புகிறார்கள் என குறிப்பிட்டுள்ள விஜேமுனி, சட்டப்படி செயல்படும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தான் அவர்களின் தாக்குதல்களால் மிகவும் பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த வைத்தியர் விஜேமுனி, கடந்த காலங்களில், சில மருந்து நிறுவனங்கள் நாட்டிற்கு மருந்துகளை இறக்குமதி செய்வதில் ஏகபோக உரிமையைக் கொண்டிருந்தன என்றும், இந்த ஏகபோகத்தை உடைத்து பல நிறுவனங்களுக்கு வாய்ப்பளித்ததன் மூலம், சில மருந்துகளின் விலை சுமார் 200 மடங்கு குறைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *