கிளிநொச்சியில் கோயில் திருவிழாக்கள் போல நீதிமன்றங்களில் குவியும் தமிழர்கள் – குற்றவாளிகளுக்கு துணைபோகும் பொலிஸார் !

கிளிநொச்சியில் கோயில் திருவிழாக்கள் போல நீதிமன்றங்களில் குவியும் தமிழர்கள் – குற்றவாளிகளுக்கு துணைபோகும் பொலிஸார் !

கிளிநொச்சியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக சீர்கேடுகளும் , போதைப்பொருள் பாவனை, வாள்வெட்டு கலாச்சாரம் என்பன மலிந்து போயுள்ளது என சூழலியல் செயற்பாட்டாளரும், ஊடகவியலாளருமான தமிழ்செல்வன் தேசம் திரை நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழ்செல்வன் காடையர் கூட்டம் ஒன்றினால் தாக்கப்பட்டிருந்தார். குறித்த குழுவினர் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்த பிரச்சனைகள் தொடர்பில் தேசம் ஜெயபாலன் கேள்விகளை தமிழ்ச்செல்வனிடம் எழுப்பியிருந்தார். தன்னை தாக்கிய குழு பிணையில் வந்து அடுத்த இரு நாட்களில் மேலும் ஒரு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டிய தமிழ்செல்வன் கிளிநொச்சியில் போதைப்பொருள் பாவனை, வாள்வெட்டு, கள்ளமரக்கடத்தல் மற்றும் ஐஸ்போதைப்போதைப்பொருள் பாவனை என்பன மலிந்து கண்முன்னே நமது எதிர்கால தலைமுறையினர் காணாமல் போவதாகவும் இந்த சமூக சீர்கேடுகள் பற்றி பேசவோ தடுக்கவோ எந்த தமிழ்தேசிய அரசியல்வாதிகளும் தயாரில்லை எனவும் சுட்டி காட்டினார்.

நானும் சமூக சீர்கேடுகள் பற்றி பேசாமல் தமிழ்தேசியம் பற்றி பேசி நூல் வெளியிட்டிருந்தால் தமிழ் தேசியவாதிகள் தன்னை கொண்டாடியிருப்பார்கள் என கூறும் ஊடகவியலாளர் தமிழ்செல்வன் கண்முன்னே அழிவடையும் தமது எதிர்கால சமூகத்தை பாதுகாக்க தவறினோம் என்றால் எதிர்காலத்தில் தமிழ்தேசியம் பெறவுள்ள நிலத்தில் யார் வாழப்போகிறார்கள்..? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சியில் கோயில் திருவிழாக்களை போல மக்கள் நீதிமன்றங்களில் குவிந்து வழிவதாகவும் பொலிஸாரின் நடவடிக்கைகள் மக்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் இல்லை என விசனம் வெளியிட்ட ஊடகவியலாளர் தமிழ்செல்வன், பொலிஸார் குற்றவாளிகளை பாதுகாப்பதுடன் அரசியல்வாதிகள் கூட தமது சுயலாப அரசியலுக்காக குற்றச்செயல்களில் ஈடுபடவதாகவும் மக்கள் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *