செல்ஃபி: smart ஆக ஏமாற்றுகிறார் சாணக்கியன் – பேசப்படாத மீனவர் பிரச்சினை  யாழ் மீனவர்கள் வேதனை !

செல்ஃபி: smart ஆக ஏமாற்றுகிறார் சாணக்கியன் – பேசப்படாத மீனவர் பிரச்சினை  யாழ் மீனவர்கள் வேதனை !

சென்னையில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் தின விழா இறுதி நாளில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுடன் செல்பி எடுத்துள்ளார். குறித்த செல்ஃபியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுடன் நிற்கும் பா. உ செல்வம் அடைக்கலநாதன், பா.உ சாணக்கியன், முன்னாள் பா.உ சுமந்திரன் ஆகியோர் சிரித்த படி உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இன்னமும் தமிழக அரசு முறையான வாழ்விட வசதிகளையோ அல்லது அடிப்படை வசதிகளையோ செய்து கொடுத்திருக்கவில்லை. மேலும் மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இலங்கை வடக்கு தமிழ் மீனவர்கள் விடயத்தில் இன்னமும் பாராமுகமாக செயற்பட்டு வருவதுடன் தி.மு.க அரசு தமிழக மீனவர்களை – இலங்கை தமிழ் மீனவர்களுடன் மோதுபடும் நிலையையும் உருவாக்கிவருகிறது.

இவ்வாறான நிலையில், பா.உ இரா.சாணக்கியன், பா.உ செல்வம் அடைக்கலநாதன் தமிழக முதல்வருடன் சிரித்த படி  செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர். தனது பேஸ்புக் பதிவில் வழமை போல் தான் Smart ஆக இருப்பதாக காட்டிக்கொள்ள பா.உ இரா. சாணக்கியன் தமிழக முதல்வர் தானாகவே தன்னுடைய தொலைபேசியை வாங்கி செல்ஃபி எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். எனினும் நேரலை வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பலரும் இரா.சாணக்கியன் தானே தொலைபேசியை தமிழக முதல்வரிடம் கொடுத்து செல்ஃபி எடுக்க காத்திருக்கும் காணொளியை பதிவிட்டு இரா.சாணக்கியன் Smart ஆக ஏமாற்றுகிறார் என்கின்றனர்.

இந்நிலையில்,  இலங்கை மீனவர்களது பிரச்சினைகள் குறித்து பேசாமல் முதலமைச்சருடன் சிரித்துக்கொண்டு வெறுமனே செல்ஃபி எடுத்தமை வருத்தம் அளிப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட மீனவ சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் திரு.ரட்ணகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த யாழ்ப்பாணம் மாவட்ட மீனவ சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர்,  தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் தான் இந்த குழு சென்றதாக அறியமுடிகிறது. அதிலும் சிலருக்கு அழைப்பு விடுத்தும், சிலருக்கு அழைப்பு விடுக்காமலும் அந்த நிகழ்வுக்கு சென்றிருந்தனர். அங்கு சென்று கடற்றொழில் அமைச்சர் கூட மீனவர் பிரச்சினை குறித்து பேசியதாக ஊடகங்களில் செய்திகள் எவையும் வெளிவரவில்லை. நிகழ்ச்சிக்கு வெளியே வந்து அங்குள்ள ஊடகங்களுக்கு என்றாலும் எமது மீனவர்களது வளங்கள் அழிப்பது குறித்து சொல்லுங்கள். எங்களது மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை சொல்லுங்கள். அதை சொல்லிவிட்டு வாருங்கள் என்றார் திரு.ரட்ணகுமார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *