இரண்டாயிரம் ரூபா போலி நோட்டுக்களுடன் மூவர் வில்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
சந்தேக நபர் பயன்படுத்திய கார், 33 போலி நோட்டுக்கள் மற்றும் ஒரு இலட்சத்து 53 ஆயிரத்து 300 ரூபா பணம் என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். p/6 -285572 என்ற இலக்கமே 33 போலி நோட்டுக்களிலும் அச்சிடப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தப் போலி நோட்டுக்கள் எவ்வாறு, எங்கு அச்சிடப்பட்டது. இவற்றுக்கு எந்த அச்சகம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வில்கமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் பாலித ஜயரத்ன தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எஸ். எஸ். பி. ரஞ்சித் குணசேகர மேலும் தெரிவித்தார்.