கல்முனை ஐஸ்வாடியில் ஆயுதங்கள் மீட்பு

gun00.jpgகல்முனை கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்ட ஐஸ்வாடியொன்றிலிருந்து சனிக்கிழமை இரவு ஆயுதங்கள் சில விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலொன்றையடுத்தே கடற்கரையிலுள்ள பழைய ஐஸ்வாடிக்கு இரவு 9.30 மணியளவில் சென்ற படையினர் அங்கிருந்த சில ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது பிஸ்ரல்1, கைக்குண்டு2, ரி.56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள்60, ரவைக்கூடுகள்2 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இதையடுத்து அந்தப் பகுதியில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *