திருகோணமலை – கொழும்பு ரயில்சேவை நேரத்தில் மாற்றம்

29-train.jpgதிரு கோணமலை கொழும்பு ரயில் சேவை நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  இதன்படி திருகோணமலையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்ட ரயில் காலை 10 மணிக்கும் இரவு 7 மணிக்குப் புறப்பட்ட ரயில் இரவு 7.30 மணிக்கும் என நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே கொழும்பிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்ட ரயில் காலை 6 மணிக்கும், இரவு 10 மணிக்குப் புறப்பட்ட ரயில் இரவு 9 மணிக்கும் என நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நேர மாற்றம் திருகோணமலையிலிருந்து இரவு ரயிலில் கொழும்பு செல்லும் அரச உத்தியோகத்தர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னர் காலை 6 மணிக்கு கொழும்பை சென்றடைந்த இந்த ரயில் தற்போது பெரும்பாலும் காலை 8.30 மணிக்கு கொழும்பை சென்றடைவதால் அலுவலகங்களில் கடமையாற்றுவோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே, இந்தப் பாதிப்புக்குப் பரிகாரம் காண ரயில்வே பகுதியினர் முன்வரவேண்டுமென அரச உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *